சினிமா செய்திகள்

அண்டா பால் விவகாரம்; மன்னிப்பு கேட்ட சிம்பு!

Published

on

ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யாதீங்க பெத்த தாய்க்கு புடவை எடுத்துக் கொடுங்க என சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு சொன்னதற்கு, சில நெட்டிசன்கள், உங்களுக்கு யார் கட்டவுட் வைக்கப்போறா, அதுக்கு யார் பாலாபிஷேகம் செய்யப்போறான்னு கலாய்த்து தள்ளினர்.

இதனால், ஆத்திரமடைந்த சிம்பு, எனக்கிருக்கும் ஒரு சில ரசிகர்களே எனக்கு அண்டாவில் பால் ஊற்றுங்க என மற்றொரு வீடியோவை வெளியிட, அது காட்டுத்தீ போல பரவி, கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில், பாசிட்டிவ் ஆக நான் சொன்ன கருத்து யாருக்கும் சென்று சேரவில்லை. ஆனால், ஒரு நெகட்டிவிட்டி எப்படி வைரலாகிறது என்று பாருங்கள். நான் யாரையும் அண்டா பால் கொண்டு எனது கட்டவுட்டுக்கு ஊற்றுங்கள் என அந்த வீடியோவில் சொல்லவில்லை. அண்டா பாலை எடுத்து வந்து, பாலுக்கு அல்லாடும் ஏழைகளுக்கு ஊற்றத்தான் சொன்னேன் என அந்தர் பல்டி அடித்தார்.

மேலும், நான் சொன்ன விஷயம் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு யார் மனதேனும் புண்படுத்தியிருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அண்டா பால் விவகாரத்துக்கு சிம்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அவர் நடிப்பில் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வரும் பிப்ரவரி 1ம் தேதி வெளியாகிறது.

seithichurul

Trending

Exit mobile version