தமிழ்நாடு

தருமபுரியில் மண்ணை கவ்விய அன்புமணி: தோல்வி குறித்து பரபரப்பு பேட்டி!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தோல்வியை தழுவினார். இந்த தோல்வி குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை பாமக அதிமுக உடன் கூட்டணி வைத்து சந்தித்தது. இந்த கூட்டணியில் பாமக 7 தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பாமக தோல்வியை தழுவியது. குறிப்பாக பாமக கோட்டையாக உள்ள தருமபுரியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். அவர் திமுக வேட்பாளர் செல்வகுமாரிடம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், தேர்தலில் தோல்வி அடைந்தாலும் இந்த தொகுதி வளர்ச்சிக்காக தொடர்ந்து போராடுவோம். தோல்வி குறித்து ஆய்வு செய்யப்படும், தவறு இருந்தால் திருத்திக் கொள்வோம். மோடி அரசு இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் என தெரிவித்தார்.

Trending

Exit mobile version