தமிழ்நாடு
கூட்டணி பிடிக்கவில்லை என்றால் எங்களுக்கு கவலை இல்லை: அன்புமணி ஆவேசம்!
![PMK - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/02/PMK.jpg)
தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க அதிமுக உடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி பலராலும் விமர்சிக்கப்பட்டு வருவதால், இது குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, இந்த கூட்டணியால் பாமக தனது கொள்கைகளை விட்டுவிடாது, அதிமுக பாஜகவை நாங்கள் விமர்சனம் செய்தோம், தமிழகத்தின் உரிமைகளை விட்டுகொடுக்க கூடாது எனப்தற்காக விமர்சனம் செய்தோம். இப்போது உள்ளே இருந்து அழுத்தம் கொடுக்க போகிறோம் என்று குறிப்பிட்டார் அன்புமணி ராமதாஸ்.
அன்புமணி ராமதாஸின் இந்த விளக்கத்தை விமர்சிக்கும் விதமாக செய்தியாளர் ஒருவர் இதுபோன்று விளக்கங்கள் உங்களுக்கு நெருடலாகா இல்லையா என கேள்வி எழுப்பினார். இதனால் ஆவேசமான அன்புமணி ராமதாஸ், இந்த கூட்டணி குறித்து ஊடகங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் எங்களுக்கு கவலை இல்லை என்றார்.
முன்னதாக அதிமுகவை பாமக விமர்சனம் மட்டும் செய்யவில்லை ஆளுநரிடம் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அளித்தது. இப்போது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஏன் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அன்புமணி, ஊழல் செய்தவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைபாடு என்றார்.