இந்தியா

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட் திருமணம்… அழகிய புகைப்படங்கள்!

Published

on

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின்மகள் ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிச்சயதார்த்தம் கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் நடைபெற்ற நிலையில் தற்போது மெஹந்தி நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த மெஹந்தி விழா மணமக்களின் இருதரப்பு குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் ஆகிய இருவருமே கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இந்த காதல் காதலுக்கு இருதரப்பு குடும்பத்தினரும் பச்சை கொடி காட்டியதை அடுத்து சமீபத்தில் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிச்சயதார்த்தத்திற்கு அடுத்த நாள் மும்பையில் உள்ள அம்பானி மாளிகையில் விருந்து நடைபெற்றது என்பதும் இந்த விருந்தில் ஏராளமானவர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நடந்த மெஹந்தி விழாவில் ராதிகா மெர்ச்சன்ட் இளஞ்சிவப்பு நிறத்தில் உடை அணிந்து மிக அழகாக காட்சி அளித்தார்.

அபு ஜானி மற்றும் சந்திப் போஸ்லே ஆகிய இருவரும் மணமகள் வடிவமைப்பாளர்களாக பணிபுரிந்தனர் என்பதும் அவர்களால் தயாரிக்கப்பட்ட லெஹங்காவை ராதிகா மெர்சன்ட் அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகிய உடை மற்றும் நகைகளுடன் தலை பின்னிய ஜடையுடன் மணப்பெண்ணாக ராதிகா மெர்சன்ட் உட்கார்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும் ராதிகா அணிந்திருந்த மலர்களால் ஆன காலணி மற்றும் கண்ணாடி எம்பிராய்டரி செய்யப்பட்ட கண் கவரும் லெஹங்கா ஆகியவையை அனைவரையும் கவர்ந்தது.

பிரபல மேக்கப் கலைஞர் மற்றும் சிகை அலங்கார நிபுணர் ஆர்த்தி நாயர், ராதிகா மெர்சண்டின் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.

என்கோர் ஹெல்த்கார் நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரியும் ராதிகா மெர்ச்சன்ட், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பதும் ஆனந்த் அம்பானியை அவர் ஒரு சில வருடங்களாக காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version