இந்தியா

ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண நிச்சயதார்த்தம்.. ஒரு நிமிடத்திற்கு ரூ.15 லட்சம் செலவா?

Published

on

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக வந்த பிரபல பாடகர் ஒருவர் ஒரு நிமிடத்திற்கு 15 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முகேஷ் அம்பானி – நீடா அம்பானி தம்பதிகளின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, என்கோர்ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்செண்டை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இந்த காதல் திருமண உறவிற்கு வர உள்ளது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா திருமண நிச்சயதார்த்த விழா ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பதும் இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக பாலிவுட் பாடகர் மிகா சிங் கலந்து கொண்டார் என்றும் அவர் இந்த நிகழ்ச்சிக்காக பெரும் தொகையை வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனந்த் – ராதிகா நிகழ்ச்சியில் மிகா சிங் பாடுவதற்காக 1.5 கோடி ரூபாய் வசூலித்தார் என்றும் அவர் மொத்தம் பத்து நிமிடங்களே பாடல்களை பாடினார் என்றும் அதன்படி கணக்கு பார்த்தால் ஒரு நிமிடத்திற்கு 15 லட்ச ரூபாய் வரை சம்பளம் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 29 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள லார்ட் ஸ்ரீநாத் கோவிலில் நடந்த இந்த பிரம்மாண்டமான விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு மருமகளாக செல்லப்போகும் ராதிகா ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டிய கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version