உலகம்
அந்தமானின் ரகசிய தீவிற்குள் நுழைந்த நபர்.. 5 நாள் கொடுமைப்படுத்தி கொன்ற சென்டினேலீஸ் ஆதிவாசிகள்!
சென்டினல்: அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்தமான் தீவுகளில் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மனிதர்களின் வருகையை விரும்பாத அங்கிருந்த ஆதிவாசிகள் அவரைக் கொலை செய்து இருக்கிறார்கள்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிறையக் குட்டி குட்டி தீவுகள் உள்ளது. அந்த வகையில் அங்கு இருக்கும் சென்டினல் தீவு மிகவும் பிரபலம். ஆனால் இது சுற்றுலா தளமாகப் பிரபலம் அடையவில்லை.
அங்கு இருக்கும் சென்டினேலீஸ் ஆதிவாசி மக்களால் பிரபலம் அடைந்து இருக்கிறது. அங்கு இருக்கும் சென்டினேலீஸ் ஆதிவாசி மக்கள் வெளி உலகுடன் எந்த விதமான தொடர்பும் இல்லாமல் இத்தனை வருடங்களாக உயிர் வாழ்ந்து வருகிறார்கள்.
சென்டினேலீஸ் என்பவர்கள் உலகம் தோன்றியதில் இருந்து வெளி உலக மனிதர்களின் தொடர்பு இல்லாமல் வசிக்கும் மனிதர்கள் இனம் ஆகும். இவர்கள் பேசும் மொழி எது என்று யாருக்கும் தெரியாது. எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது 50 – 60 சென்டினேலீஸ் மக்கள் அந்த சென்டினல் தீவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.