இந்தியா

உங்களுக்கு ஒட்டக பால் பிடிக்குமா? மோடி ஆதரவுடன் விற்பனைக்குக் கொண்டு வரும் அமுல்!

Published

on

அமுல் நிறுவனம் டிசம்பர் மாதம் முதல் குஜராத்தின் அகமதாபாத்தில் அமுல் பாலை பாகேட்டில் அடைத்து விற்பனை செய்ய உள்ளது. அதன் சோதனை ஓட்டமாகத் தீபாவளியின் போது 500 மில்லி லிட்டர் பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

குஜராத்தில் ஒட்டக பால் மாட்டு பாலை விட இரண்டு மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது, இதன் பயன் மிகப் பெரியது என்றும் 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தினைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒட்டக பாலை அனைவரும் விரும்பும் படி மாற்ற அதில் உள்ள சில கெட்ட வாசனைகளை நீக்கும் உத்திகளை அமுல் அறிமுகம் செய்துள்ளது. இதில் முழுமையான வெற்றி அடைந்தால் இந்தியாவில் முதன் முறையாக ஒட்டக பால பேக் செய்யப்பட்டு விற்பனை செய்வது இதுவே முதல் முறையாக இருக்கும்.

குஜராத்தில் தினசரி 20,000 லிட்டர் வரை ஒட்டக பாலினை பிராசஸ் செய்து விற்க அமுல் முடிவு செய்துள்ளது.

Trending

Exit mobile version