தமிழ்நாடு

அமமுக செயற்குழு & பொதுக்குழு கூட்ட தேதி அறிவிப்பு – டிடிவி தினகரன் வைக்கப் போகும் டிவிஸ்டு!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை வாழ வைப்பதற்காக போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25.02.2021 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு நடைபெற உள்ளது.

கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, தமிழகத்தின் 10 இடங்களை காணொளி வாயிலாக இணைத்து நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில், தங்களுக்கான அழைப்பிதழோடு வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 8 ஆம் தேதி, தமிழகத்துக்கு வந்த சசிகலா, இதுவரை எந்தவொரு அரசியல் நடவடிக்கையையும் வெளிப்படையாக எடுக்கவில்லை. அதே நேரத்தில் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வரும் சசிகலாவின் நெருங்கிய தோழியுமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் வர உள்ளது. அன்று சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, செய்தியாளர்களை சந்தித்துப் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த நாளுக்கு அடுத்த நாள், அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது பல்வேறு விஷயங்களைச் சொல்லாமல் சொல்வதாக தமிழக அரசியல் கள நோக்கர்கள் கூறுகிறன்றனர்.

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version