தமிழ்நாடு
சிவகங்கையில் அமமுக நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருவதால் அமமுகவினர் கலக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் அமமுக நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இதனால் அமமுக கட்சியில் சில நாட்களில் யாரும் இல்லாமல் சென்ற விடுவர்கலோ என்ற நிலை உருவாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல், இடைதேர்தல் ஆகியவற்றில் படு தோல்வி அடைந்ததால் தற்போது அமமுக நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்குடி முன்னால் அதிமுக எம்.எல்.ஏவும் தற்போதைய அமமுக நிர்வாகியுமான சோழன் பழனிசாமி துணை முதல்வர் ஓபிஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
சிவகங்கை கதர் மற்றும் கை தறி அமைச்சர் பாஸ்கரன் மாவட்ட செயலாளர் செந்தில் நாதன், ஆகியோர் சோழன் பழனிச்சாமியை துணை முதல்வரிடம் அழைத்துச் சென்று இன்று அதிமுகவில் இனைத்தனர்.
இன்னும் மேலும் நிர்வாகிகள் இனைவர்கள அமமுக கட்சியே சிவகங்கை இல்லாமல் போய்விடும் என அதிமுகவினர் சொல்லி வருகின்றனர்