Connect with us

இந்தியா

அமிதாப் பச்சனின் ரோல்ஸ் ராய்ஸ் கார் பெங்களூருவில் பறிமுதல்.. நடந்தது என்ன?

Published

on

பெங்களூரூவில் அமிதாப் பச்சன் பெயரிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்பட 7 ஆடம்பர கார்களை கர்நாடகா போக்குவரத்து காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அமிதாப் பச்சன் பெயரிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை சல்மான் என்ற கார் ஓட்டுநர், பெங்களூரூ யுபி சிட்டி பகுதியில் ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்திக் காவல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அமிதாப் பச்சன் பெயரிலிருந்து காருக்கு தேவையான ஆவணங்கள் ஓட்டுநரின் கையில் இல்லை. எனவே அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

அமிதாப் பச்சனின் தற்போதைய கார் உரிமையாளரான பாபுவிடம் விசாரித்த போது, “பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் இருந்து 6 கோடி ரூபாய் கொடுத்து இந்த காரை 2019-ம் ஆண்டு நான் வாங்கினேன். பெயரை மாற்றுவதற்கு நான் ஏற்கனவே விண்ணப்பித்துவிட்டேன். ஆனால் அது இன்னும் செய்யப்படவில்லை.

எங்களிடம் 2 ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளது. அதில் ஒன்று புதிது. அமிதாப் பச்சன் பெயரிலிருந்த காரை எனது மகள் ஓட்டுநர் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை எடுத்துச்சென்றுள்ளார். அப்போது அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எனது மகளை நெலமங்கலா காவல் நிலையத்துக்கு ஆர்டிஓ அதிகாரிகள் அழைத்துள்ளனர். பின்னர் தன்னை வீட்டிற்கு அனுப்ப உதவுமாறு அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். நான் போக்குவரத்து ஆணையரைத் தொடர்புகொண்டு எங்களுக்குத் தேவையில்லாமல் தொல்லை கொடுக்க வேண்டாம் எனக் கூறினேன். அவர் பல கார்கள் ஒரே பதிவு எண்ணில் நகரத்தில் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. அதற்காகவே கார் பறிமுதல் செய்யப்பட்டது. சரியான ஆவணங்களைக் காண்பித்த உடன் வாகனத்தை விடுவிப்பதாகக் கூறினார்” என பாபு கூறினார்.

இது குறித்து பெங்களூரு போக்குவரத்து கூடுதல் ஆணையரைத் தொடர்பு கேட்ட போது, “ரோல்ஸ் ராய்ஸ் கார் சரியான ஆவணங்கள் இல்லாமல் இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டது. காரின் உரிமையாளர் நேரில் வந்து சரியான ஆவணங்களைக் காண்பித்த பொது அது அமிதாப் பச்சனிடம் இருந்து முறையாக இவர் வாங்கி இருந்தது தெரிய வந்தது. ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு காரை ஒப்படைத்துவிட்டோம்” எனக் கூறினார்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!