சினிமா

முதல் முறையாக அமிதாப் பச்சன் “உயர்ந்த மனிதன்“ என்ற தமிழ்ப்படத்தில் நடிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published

on

இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் முதல் பட அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.  

குஷி, வாலி உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் சமீபகாலமாக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். மெர்சல் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த அவரது நடிப்பில் அடுத்ததாக நெஞ்சம் மறப்பதில்லை படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தைச் செல்வராகவன் இயக்கியிருப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து விஜயுடன் சர்க்கார்‘, மற்றும் இறவாக்கலாம் உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

உயர்ந்த மனிதன்என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தைத் திருச்செந்தூர் முருகன் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தா.தமிழ்வாணன் என்பவர் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

படத்தின் டைட்டிலை சென்னையில் நடைபெற்ற விழாவில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். அதில் தமிழில் அறிமுகமாகும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படம், தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படம் மூலம் முதன்முறையாக இந்தியில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா படம் குறித்துப் பேசுகையில், “அமிதாப் பச்சனை சந்தித்தபோது அவ்வளவு பிசியாக இருக்கின்ற மனிதனின் கால்ஷீட் கிடைக்க மிகவும் சவாலாக இருந்தது. இப்படி இருக்க `உயர்ந்த மனிதன்படத்துக்கு அவர் கொடுத்த கால்சீட் 40 நாள்கள்’’ என்று எஸ்.ஜே.சூர்யா கூறினார்.

முன்னதாக எஸ்.ஜே.சூர்யாவும், தமிழ்வாணனும் இணைந்து பணியாற்றிய கள்வனின் காதலி படம் வணிகரீதியாக நல்ல வெற்றிப் பெற்றது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version