தமிழ்நாடு

வெற்றி வேல்! வீர வேல்! என தமிழில் வாழ்த்து தெரிவித்த அமித்ஷா!

Published

on

 

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக முருகப்பெருமான் பெற்று உள்ளார் என்பதும் முருகனை வைத்து அரசியல் செய்யும் வழக்கம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கந்த சஷ்டி கவசத்தை ஒருபுறம் சிலர் இழிவு படுத்தி வரும் நிலையில் இன்னொரு புறம் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் திடீரென வேல்யாத்திரை செய்தார் என்பதும் இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது என்பதும் பங்குனி உத்திரத் திருநாளில் பக்தர்கள் முருகனின் கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் அனைவருக்கும் பங்குனி உத்திர திருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்!

இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான “பங்குனி உத்திரம்” திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி வேல்! வீர வேல்!

அமித்ஷாவின் இந்த டுவீட் வைரலாகி வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version