Connect with us

இந்தியா

மக்களவையில் அமித் ஷா ஆவேசம்: காஷ்மீர் பிரச்சனைக்கு ஜவகர்லால் நேருதான் காரணம்!

Published

on

ஜம்மூ காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று முன்மொழிந்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியையும், முன்னாள் பிரதமர் நேருவையும் கடுமையாக சாடினார்.

காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பது தொடர்பாக பேசிய அமித்ஷா, தற்போதைய நிலையில் சட்டமன்ற தேர்தலை நடத்த முடியாது. 2019-ஆம் ஆண்டின் இறுதியில் ஜம்மூ காஷ்மீருக்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றார். இதனையடுத்து மக்களவையில் ஜம்மூ காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதாவை அமித்ஷா அறிமுகப்படுத்தி பேசினார்.

அப்போது, இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு கொல்லம் கே.பிரேமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். மக்களின் நம்பிக்கையை பெற அரசு தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் இந்த மசோதாவிற்கு எதிர்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி, ஜம்மூ காஷ்மீரில் நிலையை கட்டுக்குள் கொண்டுவந்தது காங்கிரஸ்தான். பாஜக அரசின் கீழ் ஜம்மூ காஷ்மீர் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கின்றனர். மக்களின் ஆதரவில்லாமல் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது என குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து பேசிய அமித் ஷா, மக்களின் உதவியுடன் நிச்சயமாக பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவோம். ஜம்மூ காஷ்மீரில் ஜனநாயகம் நசுக்கப்படுவதாக கூறுகின்றனர். இதற்கு முன் அங்கு 132 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 93 முறை காங்கிரஸால் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் நமக்கு ஜனநாயகம் பற்றி பாடம் எடுப்பார்களா?

ஜம்மூ காஷ்மீரில் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுத்தது ஜவகர்லால் நேருதான். நாங்கள் மக்களுக்கு நம்பிக்கையளிக்கவில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் நேருவோ அப்போதைய உள்துறை அமைச்சருக்கு நம்பிக்கையளிக்காமலே காஷ்மீரில் ஒரு பகுதியை கொடுத்துவிட்டார். ஆகையால் மணிஷ் ஜி எங்களுக்கு வரலாறு பற்றி பாடம் எடுக்காதீர்கள் என்றார் ஆவேசமாக. இதனையடுத்து ஜம்மூ காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மக்களவை ஒப்புதல் அளித்தது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!