சினிமா செய்திகள்

மனைவியை பிரியுமுன் கையை பிடித்து நெகிழ்ச்சியுடன் பேசிய அமீர்கான்: வைரல் வீடியோ!

Published

on

 

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது மனைவி கிரன் ராவை விவாகரத்து செய்யப் போவதாக சமீபத்தில் அறிவித்தார் என்பதும் இருவரும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கை ஒன்று இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரன் ராவ் ஆகிய இருவரும் இணைந்து பாலிவுட் மீடியா ஒன்றிற்கு வீடியோ மூலம் தாங்கள் ஏன் பிரிந்தோம் என்பது குறித்து விளக்கமளித்தனர். அந்த வீடியோவில் நாங்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்தது ரசிகர்களுக்கு கண்டிப்பாக அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் நாங்கள் இருவரும் இந்த முடிவால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்

கணவன் மனைவி என்ற உறவை மட்டுமே நாங்கள் இழக்கின்றோம். எங்கள் மகன் ஆசாத்திற்காக நாங்கள் ஒரே குடும்பமாக தான் எப்பொழுதும் போல் வாழ்வோம். நாங்கள் இருவரும் 15 ஆண்டுகளாக வாழ்ந்த வாழ்க்கை, பொன்னான வாழ்க்கையாகவே இருந்தது. நிறைய சந்தோசங்கள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் உடைய வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டோம், எனவே இனி இருவரும் சுதந்திர பறவையாக இருக்க ஆசைப்படுகிறோம். ரசிகர்கள் எங்கள் விருப்பத்திற்கு மதிப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் அமீர்கான் தனது விவாகரத்து குறித்து விளக்கம் அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென இடையில் அவர் தனது மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு நெகழ்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பார்த்துக் கொள்ளும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் அமீர்கான் தற்போது ‘லால்சிங் சாதா’, ‘மொஹல்’ மற்றும் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கும் படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version