உலகம்
தடுப்பூசி போடுபவர்கள் முட்டாள், சிறுநீர் குடித்தால் கொரோனா வராது: அமெரிக்கரின் சர்ச்சை பதிவு!
தடுப்பூசி போடுவார்கள் முட்டாள்கள் என்றும் கொரோனா வராமல் தடுப்பதற்கு சிறுநீர் குடித்தாலே போதும் என்றும் அமெரிக்கர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உலகம் முழுவதிலும் உள்ள ஒரே வழி தடுப்பூசி செலுத்துவதுதான் என்றும் தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்றும் உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் ஒரு சில தடுப்பூசி ஆபத்தானது என்றும் சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர் கி என்பவர் கொரோனா வைரஸ் நம்மை நெருங்காமல் இருக்க சிறுநீரைக் குடிக்க வேண்டும் என்றும் தடுப்பூசி போடுவார்கள் முட்டாள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே தடுப்பூசி குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்ததற்காக சிறையில் இருந்த நிலையில் தற்போது அவர் சிறையில் இருந்து விடுதலையான பின்னரும் அதே போன்ற சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
சிறுநீர் தான் கொரோனாவிடம் இருந்து நம்மை காக்கும் ஒரே மருந்து என்றும் தடுப்பூசி போடுபவர்கள் முட்டாள்கள் என்றும் சிறுநீர் குறித்த ஆராய்ச்சியை நான் டன் கணக்கில் வைத்து உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.