உலகம்

மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை: அமெரிக்க இந்தியரின் வெறிச்செயல்

Published

on

அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து கொண்டிருந்த இந்தியர் ஒருவர் தனது மனைவியை குத்திக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி ஆர்த்தி குடும்பத் தலைவியாக இருந்தார். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளனர் என்பதும் ஆர்த்தி தற்போது 7 மாத கர்ப்பமாக இருந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலாஜி ஆர்த்தி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து நடந்த சண்டையில் பாலாஜி கத்தியை எடுத்து ஆர்த்தியை குத்தி கொலை செய்து விட்டதாகவும் தெரிகிறது. அதன் பின்னர் போலீஸ் விசாரணைக்கு பயந்து அவரும் தன்னை தானே குத்தி தற்கொலை செய்து கொண்டார்.

தாய் தந்தை ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்த 4 வயது மகள் அடுக்குமாடி குடியிருப்பில் அழுது கொண்டே இருந்ததை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து உடனடியாக இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து பாலாஜி, ஆர்த்தி பிரேதங்களை பறிமுதல் செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாலாஜியின் தந்தை கூறியபோதும் பாலாஜி ஆர்த்தி இருவரும் ஒற்று.மையான தம்பதிகளாக தான் இருந்தார்கள். நாங்கள் சமீபத்தில் கூட அமெரிக்கா சென்று அவர்களைப் பார்த்து வந்தோம். எனது மருமகள் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது விசாரணைக்கு பின்னர் தான் தெரிய வரும் என்று கூறினார்.

மேலும் தனது பேத்தி தற்போது தனது மகனின் நண்பர் வீட்டில் அமெரிக்காவில் இருப்பதாகவும் சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னர் பேத்தியை இந்தியாவுக்கு கொண்டுவர அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version