சினிமா செய்திகள்

பாவனிக்கு ஏற்பட்ட அடுத்த காதல்: இந்த காதலாவது நிலைக்குமா?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் உருவாகும் என்பதும் ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்த காதல் கானல் நீர் போல் மாறி விடும் என்பதையும் பார்த்து வருகிறோம்

குறிப்பாக முதல் சீசனில் ஆரவ் மற்றும் ஓவியா, இரண்டாவது சீசனில் மகத் மற்றும் யாஷிகா, மூன்றாவது சீஸனில் கவின் மற்றும் லாஸ்லியா, நான்காவது சீசனில் பாலாஜி மற்றும் ஷிவானி நாராயணன் ஆகியோர் காதலித்ததாக கூறப்பட்டாலும் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் காதல் காணாமல் போய்விட்டது என்பது குறிப்பிடதக்கது.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வேண்டுமென்றே ஸ்கிரிப்ட் எழுதப்பட்டு காதலிப்பது போல் நடிக்கிறார்களோ என்ற சந்தேகமும் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் 75 நாள் ஆகியும் இன்னும் ஒரு காதல் ஜோடி கூட உருவாகவில்லை என்று பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்ட நிலையில் சமீபத்தில் அபினய் மற்றும் பாவனி ஆகிய இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது
ஆனால் தாங்கள் காதலிக்கவில்லை என்றும் ஒருவரையொருவர் நட்புடன் பழகி வருவதாகவும் பாவனியும் அபினய்யும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் போட்டியாளராக வந்த அமீருக்கும் பாவனிக்கும் தற்போது காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இன்று வெளியான மூன்றாவது புரமோவில் இந்த காதல் அப்பட்டமாக தெரிகிறது என்பதும் இன்னும் 25 நாள் உள்ளது அதற்குள் கரெக்ட் பண்ணி விடுகிறேன் என்று அமீர் கூறுவதிலிருந்து இந்த காதல் தொடரும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் கடந்த சீசன்களில் இருந்த நாடக காதல் போல் இன்று இந்த காதல் வெளியில் வந்த பிறகும் தொடர்ந்தால் அமீர் மற்றும் பாவனிக்கு வாழ்த்துக்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version