தமிழ்நாடு

ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த உடல்களை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது!

Published

on

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று விபத்துக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மதியம் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியாகினர் என்பதும் இதனால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 13 பேரின் உடல்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் சூலூர் விமானப்படைத் தளத்துக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து டெல்லிக்கு எடுத்துச்செல்ல ராணுவ அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இந்த நிலையில் குன்னூரில் இருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் உடலை எடுத்துச் சென்றபோது ஒரு ஆம்புலன்ஸ் அதில் விபத்தில் சிக்கியது. இதனை அடுத்து மாற்று ஆம்புலன்ஸ் மூலம் அந்த உடல் மாற்றப்பட்டு சூலூர் படை தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குன்னூரில் இருந்து சூலூர் செல்லும் வழியில் அந்த பகுதி பொதுமக்கள் மலர்களை ஆம்புலன்ஸ் மீது வீசி தங்கள் மரியாதையைச் செலுத்தினர் என்பதும் இது குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version