சினிமா செய்திகள்

பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்து கொடுமை: ரூ.350 கோடி நஷ்ட ஈடு கேட்கும் நடிகை!

Published

on

தனது பிறப்புறுப்பில் மது பாட்டிலை திணித்து கொடுமை படுத்தியவதாகவும் அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்றும் ரூபாய் 350 கோடி நஷ்டஈடு வேண்டும் என்றும் நடிகை ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் .

ஹாலிவுட்டில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் என்ற படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். இவர் அம்பர்ஹெட் என்ற நடிகையை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் வெகு காலம் நீடிக்கவில்லை. சமீபத்தில் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நடிகை அம்பர்ஹெட் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாக குறிப்பாக வெளியூர் சென்றிருந்த போது தனது பிறப்புறுப்பில் மது பாட்டிலை திணித்து கொடுமைப்படுத்தியதாகவும் அதனால் தனது பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டது என்றும் அந்த காயத்திற்கு சிகிச்சை செய்த ஆதாரங்களையும் அம்பர்ஹெட் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நடிகை இந்த கடும் அதிர்ச்சி தரும் ஆதாரத்தை சமர்ப்பித்துள்ள நிலையில் இந்த வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version