இந்தியா
அம்பானி குற்றவாளி; சிறை தண்டனை: நீதிமன்றம் அதிரடி!
சோனி எரிக்சன் நிறுவனத்துக்கு நிலுவைத் தொகையை வழங்காத வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதற்காக அவர் சிறைக்கு செல்ல வேண்டும் மேலும் அபராதம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அந்த நிறுவனத்துக்கு 1500 கோடி ரூபாய் தர வேண்டியிருந்தது. நீதிமன்றத்துக்கு சென்ற இந்த விவகாரத்தில் முதல் தவணையாக 550 கோடி ரூபாயை 12 சதவீத வட்டியுடன் டிசம்பர் மாதத்திற்குள் எரிக்ஸன் நிறுவனத்துக்குகு தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் டிசம்பர் மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் நடந்துவரும்நிலையில் அவர் அந்த குறிப்பிட்ட முதல் தவனை தொகையை தராததால் எரிக்ஸன் நிறுவனம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதில் உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில் அனில் அம்பானியை நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது எனவும், நீதிமன்றத்தை அவமதித்துள்ளதால் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனில் அம்பானி இவ்விவகாரத்தில் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. சோனி எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.450 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டும் அல்லது அனில் அம்பானி 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவருக்கு தலா ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.