Connect with us

இந்தியா

அம்பானி குற்றவாளி; சிறை தண்டனை: நீதிமன்றம் அதிரடி!

Published

on

சோனி எரிக்சன் நிறுவனத்துக்கு நிலுவைத் தொகையை வழங்காத வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதற்காக அவர் சிறைக்கு செல்ல வேண்டும் மேலும் அபராதம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அந்த நிறுவனத்துக்கு 1500 கோடி ரூபாய் தர வேண்டியிருந்தது. நீதிமன்றத்துக்கு சென்ற இந்த விவகாரத்தில் முதல் தவணையாக 550 கோடி ரூபாயை 12 சதவீத வட்டியுடன் டிசம்பர் மாதத்திற்குள் எரிக்ஸன் நிறுவனத்துக்குகு தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் டிசம்பர் மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் நடந்துவரும்நிலையில் அவர் அந்த குறிப்பிட்ட முதல் தவனை தொகையை தராததால் எரிக்ஸன் நிறுவனம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதில் உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில் அனில் அம்பானியை நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது எனவும், நீதிமன்றத்தை அவமதித்துள்ளதால் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனில் அம்பானி இவ்விவகாரத்தில் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. சோனி எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.450 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டும் அல்லது அனில் அம்பானி 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவருக்கு தலா ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!