வைரல் செய்திகள்
பேரனுக்குப் பெயர் சூட்டுவிழா… உற்சாகத்தில் அம்பானி குடும்பத்தார்..!
உலகப் பணக்காரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானி தனது பேரனுக்கு வைத்துள்ள பெயர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் டாப் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் மகன் பிறந்தான். ஆகாஷ் அம்பானி- ஷ்லோகா மேத்தா அம்பானி தம்பதியருக்குப் பிறந்த முதல் குழந்தையை உற்சாகமாக வரவேற்ற குடும்பத்தார் தற்போது பெயர் சூட்டும் விழாவையும் குடும்பத்துக்குள்ளேயே நடத்தி உள்ளனர்.
அம்பானி குடும்பத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரக் குழந்தைக்கு பிரித்வி ஆகாஷ் அம்பானி எனப் பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியருக்கு ஆகாஷ், ஈஷா என்ற இரட்டைக் குழந்தைகளும் மூன்றாவதாக ஆனந்த் என்ற மகனும் உள்ளனர். ஆகாஷ், ஈஷா ஆகிய இருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இருவரும் ஜியோ நிறுவனத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.