தமிழ்நாடு

காலில் விழுந்து பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரியவர்: எடப்பாடி பழனிச்சாமியை சீண்டும் பாஜக!

Published

on

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை குறித்த கேள்விகளுக்கு காட்டமான பதில்களை அளித்தார். இதற்கு பாஜக அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமியை பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.

#image_title

செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமியிடம் அண்ணாமலை மறைமுகமாக அதிமுகவை விமர்சிக்கிறாரா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ஏன் அவரைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி பேசித்தான் அவர் பெரிய ஆளாகிறார். அண்ணாமலை இதுபோன்ற பேட்டிகளைக் கொடுத்து பெரிய ஆளாக வேண்டும் என நினைக்கிறார். அவர் தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்.

அரசியலில் இருப்பவர்கள் அடிப்படைத் தன்மை தெரிய வேண்டும். அதைவிடுத்து அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என பேசி வருகிறார் என விமர்சித்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம்.

அடுத்தவர் காலில் விழுந்து, பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரும் கலையை கற்றவர்களுக்கு இந்த புது அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாவம் என பதிவிட்டுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version