சினிமா செய்திகள்
நான் கைதாகவில்லை.. வீட்டில் படம்தான் பார்த்துக்கொண்டு இருந்தேன்: பூனம் பாண்டே
நான் கைதாகவில்லை, வீட்டில்தான் படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் என்று பூனம் பாண்டே மறுப்பு தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிடுபவர் பூனம் பாண்டே.
கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பூனம் பாண்டே மற்றும் அவரது காதலர் இருவரும், எந்த ஒரு காரணமும் இன்றி சொகுசு காரில் மும்பை நகரில் உள்ள மெரைன் டிரைவில் வலம் வந்துள்ளனர்.
இவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்து வந்த காவல் துறையினர், அவர்கள் உபயோகித்த விலை உயர்ந்த பிஎம்டபள்யூ கார், பூனம் பாண்டே மற்றும் அவரது காதலரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சட்டத்தை மதிக்காதது, கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தது போன்று பலவேறு பிரிவுகளில் பூனம் பாண்டே மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.
அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பூனம் பாண்டே, “நான் இரவு முழுவதும் படமாக பார்த்துக்கொண்டு இருந்தேன். நான் கைதாகவில்லை. நலமுடன் வீட்டில் தான் இருக்கிறேன். என்னை பற்றி எதுவும் எழுதாதீர்கள்” என்று வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
இவர் யார் என்று தெரியாதவர்களுக்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியா வென்றால் நிர்வாணமாகக் காட்சியளிப்பேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் தான் பூனம் பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.