சினிமா செய்திகள்

ஆல்யா மானஸாவின் மகன் பெயர் இதுதான்! கூடவே ஒரு ஷாக் நியூஸ்!

Published

on

பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை ஆல்யா மானஸாவுக்கு நேற்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவித்துள்ளார்.

ராஜா ராணி என்ற தொடரின் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்தது அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆலியா மானசா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் புகைப்படத்தை சஞ்சீவ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதும் அந்த புகைப்படம் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இரண்டாவதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சஞ்சீவ்-ஆல்யா தம்பதியினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராமில் பெண் குழந்தை பிறந்தால் லைலா என்றும், ஆண் குழந்தை பிறந்தால் அர்ஷ் என்றும் பெயர் வைக்கப்படும் என்று சஞ்சீவ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குழந்தை பிறந்த கையோடு ராஜா ராணி 2 சீரியலில் இருந்து தான் விலகி விட்டதாகவும் இனி நிரந்தரமாக தற்போது சந்தியா கேரக்டரில் நடிப்பவர் தான் இனிமேல் நடிப்பார் என்றும் ஆலியா மானசா ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version