சினிமா செய்திகள்

‘ராஜா ராணி 2’ தொடரில் இருந்து விலகும் ஆல்யா: அவருக்கு பதிலாக இவரா?

Published

on

சின்னத்திரை காதல் ஜோடிகளான ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருமே தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக இருந்து வருகின்றனர். ஒருபக்கம் ’கயல்’ என்ற தொடரில் சஞ்சீவியும், ராஜா ராணி 2 சீரியலில் ஆலியவும் பிசியாக இருக்கின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஆலியா மானசாவுக்கு பிரசவ தேதி நெருங்குவதால் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ஒரு சிறிய பிரேக் எடுக்க முடிவு செய்திருப்பதாகவும். இந்த பிரேக் காலத்தில் கதையின் போக்கு மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஆனால் இன்னொரு பக்கம் தற்காலிகமாக ஆலியா மானசா நடித்து வரும் சந்தியா கேரக்டருக்கு வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்காலிகமாக ஆலியா மானசா நடித்த கேரக்டரில் நடிக்க ஒரு சில பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பாக இந்த கேரக்டரில் ‘செம்பருத்தி’ ஷபானா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

தற்காலிகமாக சந்தியா கேரக்டரில் ஷபானா நடிப்பாரா? அல்லது கதையில் சிறு மாற்றம் செய்துவிட்டு பிரசவத்திற்கு பின் ஆலியாவே மீண்டும் வந்து நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

seithichurul

Trending

Exit mobile version