உலகம்

செவ்வாய்கிழமை வேலைநீக்கம், வெள்ளிக்கிழமை 50% கூடுதல் சம்பளத்துடன் புது வேலை: அதிர்ஷ்டக்கார பெண்ணின் டுவிட்!

Published

on

செவ்வாய்க்கிழமை வேலைநீக்கம் செய்யப்பட்ட பெண் ஒருவருக்கு வெள்ளிக்கிழமையை 50% கூடுதல் சம்பளத்துடன் புதிய வேலை கிடைத்துள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குனிந்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய கம்பெனிகள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர் என்பதும் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டதால் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்து வருகின்றனர்.

கர்ப்பமாக இருக்கும் பெண் உள்பட வேலையில் சேர்ந்து ஒரு வருடமே ஆன இளைஞர் வரை பலர் தங்களுக்கு நேர்ந்த வேலை நீக்க கொடுமை குறித்து பதிவு செய்து வருவதை பார்த்தபோது பரிதாபமாக இருந்தது.

இந்த நிலையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட பெண் ஒருவர் தனக்கு மூன்றே நாட்களில் புதிய வேலை கிடைத்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அடிப்படையில் வழக்கறிஞர் ஆன இந்த பெண் தான் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்ததாகவும் ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென நான் நிறுவனத்தினால் தன்னை வேலை நீக்கம் செய்து விட்டதாகவும் கூறினார்.

வேலை நீக்கம் செய்யப்பட்டதாக வந்த தகவலையை அடுத்து அடுத்த நிமிடமே நான் புது வேலைகளுக்கு விண்ணப்பித்தேன் என்றும் செவ்வாய்க்கிழமை வேலை நீக்கம் செய்யப்பட்ட நான் வெள்ளிக்கிழமை புதிய வேலையில் சேர்ந்து உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பழைய வேலையில் கிடைத்த சம்பளத்தை விட 50 சதவீதம் சம்பளம் அதிகம் என்றும் சம்பளத்துடன் விடுமுறையும் அதிகம் என்றும் அதுமட்டுமின்றி வீட்டில் இருந்து பணி செய்யவும் எனது புதிய முதலாளி ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஆனால் அந்த பெண்ணை போல் பலர் இல்லை என்றும் வேலை நீக்கம் செய்யப்பட்ட பலர் இன்னும் வேலை கிடைக்காமல் திண்டாடி வருவதாகவும் அந்த பதிவில் கமெண்ட்ஸ்களாக பதிவு செய்து வருகின்றன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version