சினிமா
ரஜினி பட வதந்தியால் ஆயிரம் கோடி போச்சு.. புலம்பும் இயக்குனர்…
மலையாளத்தில் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இப்படம் மலையாள சினிமா ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் குடியேறினார்.
ஒரு பேட்டியில் நீங்கள் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தால் இயக்குவீர்களா? என கேட்டதாகவும், அதற்கு ரஜினியை வைத்து படம் எடுக்க எனக்கு விருப்பமில்லை என அவர் பதிலளித்ததாகவும் ஒரு செய்தி வெளியானது.
இந்நிலையில், சமீபத்தி இதுபற்றி கருத்து தெரிவித்த அல்போன்ஸ் புத்திரன் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க நான் விரும்பவில்லை என வதந்தி பரவியதால் அவரை வைத்து படம் இயக்க முடியாமல் போனதாக வருத்தப்பட்டுள்ளர். ரஜினிக்காக ஒரு கதை வைத்திருந்தேன். அந்த படத்தை நான் எடுத்திருந்தால் ரூ.1000 கோடி வசூலித்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.