தமிழ்நாடு
அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்: ஓ.பி.எஸ்
அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு நிலவி வரும் நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
இது குறித்து பன்னீர் செல்வம், ‘பாரதிய ஜனதா கட்சி மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கையினை வைத்துள்ளது. தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அதிமுக – பாஜக கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை’ என்று கூறியுள்ளார்.
“உங்களால் தான்” என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு…@CVShanmugamofl pic.twitter.com/aerd7SgIoe
— K.T.Raghavan (@KTRaghavanBJP) July 7, 2021
முன்னதாக அதிமுகவின் முக்கிய நிர்வாகி சி.வி.சண்முகம், ‘பாஜகவுடன் சட்ட மன்றத் தேர்தலில் கூட்டணி வைத்த காரணத்தினாலேயே நாங்கள் தோல்வி அடைந்தோம்’ என்று பரபரப்பு கருத்தைத் தெரிவித்தார்.
அதற்கு பாஜகவின் கே.டி.ராகவன், ‘எங்களுக்கு உங்களுடன் கூட்டணி வைத்த காரணத்தினால் தான் வெற்றி நழுவி விட்டதோ எனத் தோன்றுகிறது’ என்று கூறியுள்ளார். அதை ஆமோதித்து பாஜகவின் உறுப்பினர் நடிகை குஷ்பும் கருத்து கூறியுள்ளார்.
இந்த காரணத்தினால் அதிமுக – பாஜக இடையில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. அதற்கு விளக்கம் அளித்து ஓ.பி.எஸ் கருத்து கூறியுள்ளார்.