தமிழ்நாடு
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து மாணவ மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது. பள்ளிகள் விடுமுறை என்றால் சந்தோசப்படும் மாணவ-மாணவிகள் எப்போது பள்ளிகள் திறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி இன்று முதல் பள்ளி திறக்கும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் சற்று முன் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
முதல் கட்டமாக பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் பள்ளிகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் இன்னும் சில நிமிடங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வர தொடங்கி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள 13 ஆயிரத்து 605 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
இன்று முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்றும் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 3,30 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்றும் விளையாட்டு வகுப்பு மட்டும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று பள்ளிகள் திறந்ததை அடுத்து மாணவ மாணவிகள் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு செல்ல தயாராகி வருகின்றன. பல பேருந்துகளில் பள்ளி மாணவிகள் புத்தக பையுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் கவனத்துடன் ஒரு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.