உலகம்
இலங்கை அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா: பரபரப்பு தகவல்!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசுக்கு சிக்கல் மேல் சிக்கல் எழுந்துள்ளது. குறிப்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதன்பின் அவர் ராஜினாமா செய்யவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் இலங்கையில் மக்கள் போராட்டம் காரணமாக எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது என்பதும், சமூக வலைத் தளங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொடர்ந்து பொது மக்களின் போராட்டம் நீடித்து வருவதை அடுத்து இன்று இலங்கையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகி விட்டது. குறிப்பாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான மஹிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டார்.
இலங்கையில் 26 அமைச்சர்களும் அதிரடியாக ராஜினாமா செய்தாலும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே ராஜினாமா செய்யவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 26 அமைச்சர்கள் இலங்கை அதிபரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இலங்கை அமைச்சர்கள் ஒட்டுமொத்த ராஜினாமாவை அடுத்து இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நெருக்கடியை பிரதமர் மற்றும் ஜனாதிபதி எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.