தமிழ்நாடு

தபால் நிலையங்கள் இயங்கும் நேரம் மாற்றம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தினந்தோறும் விதிக்கப்படுகின்றன என்பது தெரிந்ததே.

ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தபால் நிலையங்கள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வங்கிகள் அனைத்தும் மதியம் 2 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்காக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தபால் நிலைய கவுண்டர்களும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து தபால் நிலைய கவுண்டர்களும் பிற்பகல் 2 மணி நேரம் மட்டுமே இயங்கும் என்று இதனை அடுத்து தபால் நிலையம் செல்லும் வாடிக்கையாளர்கள் பிற்பகல் 2 மணிக்குள் செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version