தமிழ்நாடு
1-9 வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ்: அரசு அதிரடி அறிவிப்பு!
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ் அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தனியார் மற்றும் அரசு பள்ளிக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
தமிழகத்தை போலவே புதுவையிலும் அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டு தேர்வு மற்றும் பொதுத் தேர்வு உண்டு என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் தற்போது தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் தேர்வுகள் நடைபெற்றாலும், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரையும் ஆல்பாஸ் செய்ய வேண்டும் என அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு புதுவை மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் பாஸ் மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மதிப்பெண்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.