இந்தியா
வகுப்புகள் தொடங்குவது எப்போது? அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு!
2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவது எப்போது என்பது குறித்த அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு செய்துள்ளது.
2022-23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி துவங்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .
அகில இந்திய தொழில்நுட்ப கல்வியில் சேரும் மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ஆம் தேதி முதல் ஜூலை 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் மாதத்தில் ஆன்லைன் அல்லது நேரடி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் பேரிடர் காலத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளும் வழிகாட்டுதலும் இந்த தேதிகளில் மாற்றம் இருக்கலாம் என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.