தமிழ்நாடு

எஞ்சினியரிங் உள்பட அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

Published

on

நாளை மறுநாள் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தான் மீண்டும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை மறுநாள் அதாவது மே 14ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிஏ, எம்சிஏ, எம்.ஈ, எம்.டெக் ஆகிய படிப்புகளுக்கான தேர்வு அன்றைய தினம் டான்செட் தேர்வு நடைபெற இருப்பதால் அதில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version