இந்தியா
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் 450 மணிநேர இன்டர்ன்ஷிப் கட்டாயம்: யுஜிசி அதிரடி அறிவிப்பு
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் 450 மணி நேரம் இன்டர்ன்ஷிப் கட்டாயம் என யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
இரண்டு வகையான ஆய்வுப் பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். அதாவது மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலோ, ஆய்வு மனப்பான்மையை வளர்க்கவோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
1. 4 ஆண்டுகால இளங்கலைப் படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 20 கிரெடிட்டுகளைப் பெற பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமோ பட்டத்துடன் வெளியேறும் மாணவர்கள், முறையே இரண்டாவது செமஸ்டர் அல்லது நான்காவது செமஸ்டரில் 8 முதல் 10 வாரப் பயிற்சியை எடுக்க வேண்டும்.
2. பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்கள், இரண்டாவது அல்லது நான்காவது செமஸ்டர் தேர்வுக்குப் பின் விருப்பத்தின் அடிப்படையில் ஆய்வுப் பயிற்சியை மேற்கொள்ளலாம். அவர்கள் உயர் கல்வி நிறுவனங்கள் அல்லது ஆய்வு நிறுவனங்கள் அல்லது தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களில் ஆய்வுப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
3. ஒவ்வொரு ஆய்வுப் பயிற்சியாளரும் (இன்டர்ன்), தன்னுடைய பயிற்சிக் காலத்தில் 450 மணி நேர ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டும்.
4. சான்றிதழ் அல்லது பட்டயப் படிப்பை முடிக்க விரும்பும் மாணவர்கள் 450 மணி நேர ஆய்வுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். 4 ஆண்டுகாலப் பட்டப் படிப்பு மாணவர்கள், ஆய்வுப் பயிற்சியில் 450 மணி நேர ஆய்வுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். 4 ஆண்டுகாலப் பட்டப் படிப்பு மாணவர்கள், ஆய்வுப் பயிற்சி கட்டாயம் பெற வேண்டும்
5. மாணவர்கள் இந்த ஆய்வுப் பயிற்சியை தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் அல்லது வேறு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளலாம். பயிற்சி மாணவர்கள் ஒவ்வொருக்கும் ஆய்வு மேற்பார்வையாளர் நியமனம் செய்யப்படுவார்.