தமிழ்நாடு
முடிந்தது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் 3 பரிசுகளை வென்றவர்கள் யார் யார்?
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்ற நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கிய மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் இந்த நிலையில் இன்று காலை 7 மணிமுதல் நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்றுமுன் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 21 காளைகளை அடக்கிய கார்த்திக் என்பவர் முதல் பரிசை பெற்றார். அவருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக அளிக்கப்பட்டது. அதேபோல் 19 காளைகளை அடக்கிய ராம்குமார் என்பவர் இரண்டாமிடம் பெற்றதை அடுத்து அவருக்கு இருசக்கர வாகனம் பரிசு அளிக்கப்பட்டது.
13 காளைகளை அடக்கி மூன்றாமிடம் பெற்ற கோபாலகிருஷ்ணனுக்கும் பரிசளிக்கப்பட்டது. கது அதேபோல் சிறந்த காளையின் சொந்தக்காரர் தமிழ்ச்செல்வன் என்பவருக்கு தமிழக முதல்வரின் சார்பில் சொகுசு கார் பரிசாக அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.