கிரிக்கெட்

ஐபிஎல் புதிய அணிகள் குறித்த முக்கிய தகவல்!

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 14 ஆண்டுகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இதில் ஐந்து முறை மும்பை அணியும், நான்கு முறை சென்னை அணியும் சாம்பியன் பட்டங்களை பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது 8 அணிகள் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் நிலையில் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக இரண்டு அணிகளை இணைக்க பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதிய அணிகளின் ஏலம் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து புதிய அணிகளை வாங்க பல முன்னணி நிறுவனங்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக மான்செஸ்டர் யுனைடெட் என்ற கால்பந்து நிறுவனம் ஒரு அணியை வாங்க உள்ளதாகவும், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஒரு அணியை வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஏலம் முடிந்த பின்னரே இந்த புதிய இரண்டு அணிகள் யார் யாருக்கு செல்லும் என்பது தெரியவரும்.

இந்த நிலையில் புதிதாக உருவாக இருக்கும் அணிகள் எந்தெந்த நகரங்களை மையமாக வைத்து உருவாகும் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி ஐபிஎல் புதிய அணிகள் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு உருவாகும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version