தமிழ்நாடு

இது தான் திருமங்கலம் ஃபார்முலா: அழகிரி அழகான விளக்கம்!

Published

on

திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி திருமங்கலம் ஃபார்மலா என்றால் என்ன என்று பத்திரிக்கை ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா மூலம் திமுக வெற்றியடைந்ததாகக் கூறப்படும் நிகழ்வின் தொடர்ச்சியாகத் தேர்தலில் பணம் வழங்கி வெற்றி பெறும் முறைக்குத் திருமங்கலம் ஃபார்முலா என்ற பெயர் உருவானது. மு.க.அழகிரி தலைமையில் அந்த தேர்தலை திமுக தொண்டர்கள் எதிர்க்கொண்டு வெற்றி பெற்றதால் திருமங்கலம் ஃபார்முலா என்றால் அழகிரி ஞாபகம் தான் வரும்.

இந்நிலையில் இந்தியா டுடே ஊடகத்திற்கு நேற்று முன்தினம் பேட்டியளித்த மு.க.அழகிரியிடம் திருமங்கலம் ஃபார்முலா குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அழகிரி, திருமங்கலம் ஃபார்முலா என்பது பணத்தை கொடுத்து வெற்றி பெற்றது என்று பலரும் தவறாக கூறி வருகின்றனர். ஆனால் கலைஞர் தேர்தல்களை எப்படி அணுகுகிறார் என்பதை சிறுவயதில் இருந்தே நான் பார்த்து வருகிறேன். தொண்டர்களை ஊக்குவிப்பார், திடீரென இரவு நேரத்தில் பூத்துக்கு சென்று ஆய்வு செய்வார். அவரது பாணியையே நான் திருமங்கலத்தில் பின்பற்றினேன் என பதிலளித்தார்.

seithichurul

Trending

Exit mobile version