தமிழ்நாடு

கமல்ஹாசனுக்காக நடுரோட்டில் குத்தாட்டம் போட்டு ஓட்டு கேட்ட அக்சராஹாசன்!

Published

on

நடிகர் கமல்ஹாசன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி முதல் முதலாக தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது தெரிந்ததே.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை எதிர்த்து போட்டியிடும் கமல்ஹாசனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் அவர் முதல் முதலாக சட்டசபைக்குள் எம்எல்ஏவாக செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கமல்ஹாசன் கோவையில் தீவிரமாக பிரச்சாரம் செய்துவந்த நிலையில் அவருக்கு துணையாக அவருடைய அண்ணன் மகள் சுகாசினியும் பிரச்சாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் அவருக்கு துணையாக சென்ற நடிகை அக்ஷரா ஹாசன் தற்போது கோவை தெருக்களில் இறங்கி குத்தாட்டம் போட்டு வாக்குகளை சேகரித்து வருகிறார். இதுகுறித்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஒருபுறம் இசையை ஒலிக்க இன்னொருபுறம் அக்சராஹாசனும், சுஹாசினியும் குத்தாட்டம் போட்ட காட்சியை அடுத்து அந்த பகுதியில் உள்ள பெண்களும் சேர்ந்து குத்தாட்டம் போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version