Connect with us

இந்தியா

டாடாவுக்கு போட்டியாக களமிறங்குகிறதா ஆகாசா ஏர்? 300 புதிய விமானங்கள் வாங்க திட்டம்..!

Published

on

டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் 450 புதிய விமானங்களை வாங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆகாசா விமான நிறுவனமும் 300 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

உள்நாட்டு விமான நிறுவனமான ஆகாசா நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று இலக்க புதிய விமானங்களை ஆர்டர் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அதாவது இன்னும் ஒரு ஆண்டில் இந்த நிறுவனம் 300-க்கும் மேற்பட்ட புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஆகாச ஏர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினய் துபே அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது இந்த ஆண்டு இறுதிக்குள் நாங்கள் ஒரு மிகப்பெரிய விமான ஆர்டரை வெளியிட உள்ளோம். அதன் சரியான அளவை இப்போது வெளியிடப் போவதில்லை என்றாலும் மூன்று இலக்கங்களில் இருக்கும் என்று தெரிவித்தார். ஆனால் ஆகாசா ஏர் நிறுவனத்தின் வட்டாரங்களில் விசாரித்த போது 300க்கும் அதிகமான விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச அளவில் விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பெங்களூரில் ஒரு விமான தொழில்நுட்பம் குறித்த அகாடமியை அமைக்க உள்ளதாகவும் வினய் துபே தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆகாசா விமான நிறுவனம் 72 விமானங்களை ஆர்டர் செய்துள்ளது என்பதும் அதில் 18 விமானங்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்தியாவில் வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப விமானங்களின் எண்ணிக்கையும் கணிசமாக தேவைப்படுகிறது என்றும் அதனால் அதிக விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. போயிங் அல்லது ஏர்பஸ் நிறுவனத்திற்கு தங்களுடைய ஆர்டர் இருக்கும் என்றும் கூறப்பட்டாலும் இந்த கருத்தை ஆகாசா ஏர் விமான நிறுவனம் உறுதி செய்யவில்லை.

இந்திய விமான நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1500 முதல் 1700 விமானங்களை ஆர்டர் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இண்டிகோ 500 விமானங்களை ஆர்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா உள்பட அனைத்து விமான நிறுவனங்களும் அடுத்தடுத்து புதிய விமானங்களை இறக்கப் போவதை அடுத்து விமான பயணிகளுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!