சினிமா செய்திகள்

தந்தை மறைவுக்கு அஜித்குமாரின் உருக்கமான பதிவு!

Published

on

நடிகர் அஜித்குமார் தனது மறைவை முன்னிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமாரின் தந்தை பி. பாலசுப்ரமணியம் (85) இன்று காலை வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர். இதனை அடுத்து அஜித்குமார் குடும்பத்தின் சார்பில் இரங்கல் குறிப்பை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது, ‘எங்களது தந்தை பி.எஸ். மணி இன்று காலை உடல்நிலை குறைவு காரணமாக தூக்கத்திலேயே எங்களை விட்டு பிரிந்தார். அவருக்கு வயது 85. நான்கு வருடங்களுக்கு முன்பு அவருக்கு பக்கவாதம் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதன் பிறகு சிகிச்சைக்காக அவருக்கு மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஒரு அழகான வாழ்க்கையை அவரது காதல் துணையும் எங்கள் அம்மாவுடனும் கிட்டத்த 60 வருடங்கள் நிறைவாக வாழ்ந்திருக்கிறார். இந்த கடினமான சமயத்தில் நீங்கள் அனைவரும் தரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

நாங்கள் உங்கள் அழைப்புகளை எடுக்கவில்லை என்றாலோ அல்லது குறுஞ்செய்திக்கு பதில் கொடுக்கவில்லை என்றாலோ எங்கள் சூழலைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். மற்றபடி எங்களது இந்த தனிப்பட்ட சடங்குகளுக்கு மதிப்பளிப்பீர்கள் என நம்புகிறோம். இப்படிக்கும், அனுப் குமார், அஜித்குமார், அனில்குமார்’ என அதில் தெரிவித்து இருக்கிறார்கள். இன்று காலை 10 மணிக்கு மேல் பெசண்ட் நகர் மின்மயானத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்று பிறகு உடல் தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version