சினிமா செய்திகள்

அஜித் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தது ஏன்?

Published

on

தல அஜித் சற்றுமுன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தல அஜித் தற்போது ’வலிமை’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் உள்நாட்டு படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் விரைவில் வெளிநாட்டு படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அனேகமாக அடுத்த மாதம் படக்குழுவினர் வெளிநாடு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் அஜித் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரைப் பார்த்த காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் முண்டியடித்துக்கொண்டு செல்பி எடுத்தனர். இந்த செல்பி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் ஏன் சென்னை காவல்துறை ஆணையரை பார்க்க வந்தார்? என்பது குறித்து தகவல் இன்னும் வெளிவரவில்லை. அவர் காவல்துறை ஆணையரிடம் ஏதேனும் புகார் கொடுத்த வந்தாரா? அல்லது பாதுகாப்பு கேட்க வந்தாரா? என்பதை இனிமேல்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version