சினிமா செய்திகள்

திருமணத்திற்கு அஜித்தை அழைக்க முடிவு செய்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா?

Published

on

கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் விக்னேஷ் மற்றும் நயன்தாரா வரும் ஜூன் மாதம் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில் திருமணத்திற்கு அஜித்தை அழைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது .

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பதும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப் பட்டது .

இந்த நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு திருமணத்தை நடத்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் முடிவு செய்திருப்பதாகவும் கேரளாவில் மிகவும் எளிமையாக மிக குறைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .

திரையுலகை பொறுத்தவரை அஜித்தை மட்டுமே அழைக்க நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பதும் அந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version