சினிமா செய்திகள்

அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Published

on

வெள்ளிக்கிழமை மாலை சென்னை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில், நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது கண்டிப்பாக வெடிக்கும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

நடிகர் அஜித் வீட்டிற்கு உடனடியாக சென்ற காவல் துறையினர், வீடு முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்தினர். அஜித் மற்றும் அவர்களது குடும்பத்தினர் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கினர்.

சோதனை இறுதியில் அவரது வெடிகுண்டு இல்லை, அது ஒரு போலி மிரட்டல் அழைப்பு என்றும் தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்துக் காவல் துறையினர் ஆய்வு செய்த போது, அழைப்பு வந்த எண் மரக்காணத்தை சேர்ந்த புவனேஷ்வரன் என்பதும், சில தினங்களுக்கு முன்பு விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக கால் செய்தவரும் இவர் தான் என்று தெரியவந்தது.

உடனடியாக புவனேஷ்வரனை கைது செய்த காவல் துறையினர், அவரை விசாரித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version