சினிமா செய்திகள்

11 ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் மிரட்டுகிறார்கள்: ஸ்டண்ட் இயக்குனர் புகார்!

Published

on

11 ஆண்டுகளாக அஜித் ரசிகர்களால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக ஸ்டண்ட் இயக்குனர் ஒருவர் சென்னை காவல் துறையில் புகார் அளித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் மு கருணாநிதி அவர்களுக்கு ’பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற திரை உலகின் அவர்களால் எடுக்கப்பட்ட விழா நடந்தது.

இந்த விழாவில் கலந்துகொண்ட அஜீத் தன்னை அரசியல்வாதிகள் மிரட்டுவதாகவும் எங்களை வேலை செய்ய விடுங்கள் என்றும் இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வது எங்கள் வேலை இல்லை என்றும் பேசினார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுந்து நின்று கை தட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜீத் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவ்வாறு பேசியது குறித்து கருத்து கூறிய ஸ்டண்ட் இயக்குனர் ஜாக்குவார்தங்கம், ‘எங்கிருந்தோ வந்த அஜித் மனம் போன போக்கில் பேசக்கூடாது என்றும் அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

இதனை அடுத்து கொந்தளித்த ரசிகர்கள் சென்னை கேகே நகரில் உள்ள ஜாக்குவார் தங்கம் வீட்டை முற்றுகையிட்டனர். அன்றைய தினம் அவர் வீட்டில் இல்லாததால் தப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து 11 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் கடந்த 11 ஆண்டுகளாக தனக்கு அஜித் ரசிகர்களால் கொலை மிரட்டல் வந்து கொண்டிருப்பதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஜாகுவார் தங்கம் புகார் அளித்துள்ளார்.

அஜித்துக்கும் தனக்கும் தகராறு இருப்பது போன்ற பொய்யான தகவலை அஜித் ரசிகர்கள் பரப்பி வருவதாகவும் அஜித் ரசிகர்கள் தனக்கு எதிராக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

Trending

Exit mobile version