ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் தொழிலாளர் தினம் மட்டுமின்றி அஜித் பிறந்தநாள் விழாவும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த ஒரு மாதமாகவே அஜித் பிறந்த தினத்தை கொண்டாட திட்டமிட்டிருந்த ரசிகர்கள் நேற்று நள்ளிரவு 12 மணிமுதல் அஜித்தின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
முதியோர் மற்றும் அனாதை இல்லங்களுக்கு சென்று உணவு மற்றும் உடை கொடுத்தல், ரசிகர்களுக்கு ஒருவருக்கொருவர் சாக்லெட் மற்றும் இனிப்புகள் பரிமாறி கொள்தல், சமூக வலைதளங்கள் மூலம் அஜித்துக்கு தங்களது வாழ்த்துக்களை கூறுதல் என அஜித்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டாலும் ரசிகர்களை நேரடியாக சந்திக்காமல் இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவரது பிறந்த நாளின் போது உற்சாகமாக கொண்டாட கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பாக அவரது திரைப்படங்கள் வெளியாகும் போது ஒரு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஜித்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும், தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும், பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பிறந்தநாளை கொண்டாடும் அஜீத் இன்னும் நீண்ட நாட்களுக்கு நல்ல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும் என்று அவர்கள் தங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.