சினிமா செய்திகள்
அஜித் பட நாயகி மீது கடும் கோபத்தில் அஜித் ரசிகர்கள்?
இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பு படமாக வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா மீது அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம், நேற்று அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை வெளியான நிலையில், இன்று நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படம் வெளியாவது தானாம்.
சக்ரி டொலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படம் கடும் பிரச்னைகளை சந்தித்து இன்று ஒரு வழியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியான நேர்கொண்ட பார்வை படம் செம்ம ரெஸ்பான்ஸை அள்ளி வரும் நிலையில், இன்று நயன்தாரா படம் வெளியாவதால், கொலையுதிர் காலம் படத்திற்கு தான் நஷ்டம் என விநியோகஸ்தர்கள் தெரிவித்திருந்தாலும், படத்தை படக்குழு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியில் காமோக்ஷி என்ற பெயரில் வெளியான இந்த படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.