தமிழ்நாடு

மனைவி ஷாலினியுடன் ஓட்டு போட வந்தார் தல அஜித்: வைரல் புகைப்படம்!

Published

on

தமிழகத்தில் இன்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை உள்பட பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் அதிகாலை 6 மணி முதலே வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்க காத்திருக்கின்றனர் என்பதும் இன்னும் ஒரு சில நிமிடங்களில் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பல வாக்குப்பதிவு மையங்களில் திரையுலக பிரபலங்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வரிசையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தல அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக இன்று காலை 6.30 மணி முதல் வரிசையில் நிற்பதாக புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அஜித் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் திருவான்மியூர் வாக்கு பதிவு மையத்தில் மனைவி ஷாலினியுடன் வரிசையில் நிற்கும் அஜித்துடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version