தமிழ்நாடு

வாக்களிக்கும்போது ரசிகர்கள் தள்ளுமுள்ளு: அட்வைஸ் செய்த அஜித்

Published

on

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது என்பதும் சென்னையில் தல அஜித் தனது மனைவியுடன் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தல அஜித் வாக்களிக்க வரும் போது ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்த முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவான்மியூர் வாக்குச்சாவடியில் அஜித் வாக்களிக்க வருவார் என்பதை எதிர்பார்த்து ஏற்கனவே இன்று காலை 6 மணி முதலே ரசிகர்கள் குவிந்தனர். அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களிக்க வந்த போது அவருடன் முண்டியடித்துக்கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சித்தார்.

அதேபோல் அவர் வரிசையில் நின்ற போதும், வாக்களிக்கும்போது பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அதிக அளவில் அவரை புகைப்படம் எடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அஜித் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறினார். பொது இடத்தில் யாருக்கும் தொல்லை தரக்கூடாது என்று அவர் அட்வைஸ் கூறிய காட்சிகளின் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகிய இருவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி விட்டு வீட்டுக்கு கிளம்பி செல்லும் வரை காவல்துறையினர் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அஜித் வாக்குச்சாவடிக்கு வந்தது முதல் அவர் கிளம்பும் வரை ரசிகர்கள் பின் தொடர்ந்து விடாமல் அவருடன் புகைப்படம் எடுக்க முயற்சித்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version