சினிமா செய்திகள்

பேராசிரியர் பேங்க் கொள்ளையராக மாறியது ஏன்? அஜித் 61 படத்தின் கதை இதுவா?

Published

on

அஜித் 61  திரைப்படத்தில் அவர் முதல் பாதியில் பேராசிரியராக நடிக்க இருப்பதாகவும் இரண்டாவது பாதியில் தான் அவர் வங்கிக்கொள்ளையராக நடிக்க இருப்பதாகவும், கூறப்படுகிறது .

ரஜினிகாந்த் நடித்த ’நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தில் முதல் பாதியில் ரஜினிகாந்த் பேராசிரியராகவும் இரண்டாம் பாதியில் அவர் கொலைகாரனாகவும் மாறுவார் என்பதும், அதற்கு ஒரு அழுத்தமான காரணம் கூறப்பட்டு இருக்கும் என்பதும் தெரிந்ததே.

அதேபோல் முதல் பாதியில் பேராசிரியராக இருக்கும் அஜித் வங்கி கொள்ளையராக மாறுவதற்கும் ஒரு அழுத்தமான காரணத்தை எச்.வினோத் கூறியிருப்பதாகவும் இன்றைய சமூகப் பிரச்சனையை மிக ஆழமாக வினோத் இந்த படத்தில் கூறியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது .

எனவே முதல் பாதி கலகலப்பாகவும் குடும்ப சென்டிமென்ட் இருக்கும் என்றும் இரண்டாவது பாதி முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படத்தின் செய்திகள் கசிந்து வருவதை பார்க்கும் போது படம் சூப்பர் ஹிட் என்று இப்போதே அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version